
சிவகாசியில் உள்ள அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுரியில் பியுசியும், பிஎஸ்சி கணிதமும் படித்து முடித்தார். பதினோராம் வகுப்பில் அவர் எடுத்த அதிக மதிப்பெண்ணின் பயனாக, அவருடைய கல்விச் செலவு முழுவதையும் அய்ய நாடார் அறக்கட்டளையே ஏற்றுக் கொண்டது.
கல்லூரிக் கல்வி
சிவகாசியில் உள்ள அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுரியில் பியுசியும், பிஎஸ்சி கணிதமும் படித்து முடித்தார். பதினோராம் வகுப்பில் அவர் எடுத்த அதிக மதிப்பெண்ணின் பயனாக, அவருடைய கல்விச் செலவு முழுவதையும் அய்ய நாடார் அறக்கட்டளையே ஏற்றுக் கொண்டது.
பதினோராம் வகுப்புத் தேர்வில் மாநிலத்திலேயே அவர் 52-வது ரேங்க் என்பதால், பட்ட மேற்படிப்பு படித்து முடிக்கும் வரைக்கும் அவருக்கு இந்திய அரசின் கல்வி உதவித் தொகையும் கிடைத்தது. பிஎஸ்சி கணிதத் தேர்வில் கல்லூரியில் முதல் மாணவனாகவும், மதுரைப் பல்கலைக் கழகத்திலேயே பன்னிரண்டாவது ரேங்க் பெற்றும் தேறினார் (1972).