
ஊருக்குக் கிழக்கே இரண்டு மைல் தொலைவிலுள்ள வெள்ளைய கவுண்டனூர் தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையிலும், கூவக்காபட்டித் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு இரண்டு ஆண்டுகளும் படித்து முடித்தார்.
தொடக்கப் பள்ளிக் கல்வி
ஊருக்குக் கிழக்கே இரண்டு மைல் தொலைவிலுள்ள வெள்ளைய கவுண்டனூர் தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையிலும், கூவக்காபட்டித் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு இரண்டு ஆண்டுகளும் படித்து முடித்தார்.
ஊர் மக்களிடையே இருந்த கோஷ்டித் தகராறு காரணமாகக் கூவக்காபட்டியில் இருந்த மேலாண்மைத் தொடக்கப்பள்ளி மூடப்பட்டது. ஊர் ஜமீன், அவருடைய அப்பாவெல்லாம் ஒரு கோஷ்டி. இந்த கோஷ்டியைச் சார்ந்த பிள்ளைகள் எல்லாம் ஜமீந்தார் அரண்மனைத் திண்ணையிலும், புளிய மரத்தடியிலும், பினாங்குக்காரர் வீட்டுத் தகரக் கொட்டகையிலும் படித்தோம். அவருடைய முதல் வகுப்பின் பெரும்பகுதி இவ்வாறாகக் கழிந்தது. ஒன்றும் சரிப்பட்டு வராமல் போகவே அவரது அப்பா கோஷ்டியினர் அவர்களையெல்லாம் அவர்கள் ஊருக்கு இரண்டு மைல் தொலைவில் உள்ள வெள்ளைய கவுண்டனூர் அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்தனர். சேர்ந்த ஒரு மாதத்திலே முழுப் பரீட்சை வந்துவிட்டது. பக்கத்துப் பையன் சிலேட்டைப் பார்த்து எழுதி பாஸ் செய்துவிட்டார்.
கூவக்காபட்டியிலிருந்து வெள்ளைய கவுண்டனூர் வெகுதூரத்தில் இருப்பதுபோல் அவர்களுக்கு இருந்தது. அவ்வளவு தொலைவு தினமும் நடந்து போய்வருது மிகவும் கஷ்டமாக இருக்கும். ஒரு கையில் பள்ளிக் கூடத்துப் பை தோளில். இன்னொரு கையில் தூக்குச் சட்டி. போகும் பாதை இருபுறமும் வேள மரங்களும் முட்புதர்களும் கொண்ட அடர்ந்த வேலிகளுக்கு நடுவே செல்லும். வேலிகளில் கோவைக் கொடி படர்ந்து இருள் சூழ்ந்து காணப்படும். பயம் தெரியாமல் இருக்கப் பாட்டுப் பாடிக் கொண்டே பள்ளிக்குச் சென்று வருவார்கள். நான்காம் வகுப்புவரை அப்பள்ளீயில்தான் படித்தார்.
இதற்கிடையே அவர்களது ஊர் கோஷ்டிகளிடையே சமரசம் ஏற்பட்டுப் பள்ளி திறக்கப்பட்டது. கூவக்காபட்டிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்தார். ஐந்தாம் வகுப்பில் அவர்தான் முதல் ரேங்க். ஆறாம் வகுப்புக்கு ஐந்து மைல் தொலைவில் உள்ள வேடசந்தூர் செல்ல வேண்டும். அது சாத்தியமில்லை என்பதால் மீண்டும் ஓராண்டு ஐந்தாம் வகுப்பே படித்தார். (1962).