உயர்நிலைப் பள்ளிக் கல்வி

14

Shared

வேடசந்தூர் கழக உயர்நிலைப் பள்ளியில் (அரசு பள்ளி) ஆறாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்புவரை ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவனாகவே படித்து முடித்தார். அப்போது பதினோராம் வகுப்பு வரைதான் பள்ளிக் கல்வி. பிறகு கல்லூரியில் பியுசி படிக்க வேண்டும். அதன் பிறகே பட்டப் படிப்பு. பதினோராம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேறினார்.

உயர்நிலைப் பள்ளிக் கல்வி

வேடசந்தூர் கழக உயர்நிலைப் பள்ளியில் (அரசு பள்ளி) ஆறாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்புவரை ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவனாகவே படித்து முடித்தார். அப்போது பதினோராம் வகுப்பு வரைதான் பள்ளிக் கல்வி. பிறகு கல்லூரியில் பியுசி படிக்க வேண்டும். அதன் பிறகே பட்டப் படிப்பு. பதினோராம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேறினார்.

 

இரண்டாவது ஆண்டு ஐந்தாம் வகுப்பு முடித்த தருவாயில், அவர்களுடைய குடும்பத்தினர் பட்டிருந்த கடனுக்காக இவர்களுடைய புன்செய் நிலத்தையும், குடியிருந்த வீட்டையும் கடன் கொடுத்தவருக்கே எழுதி வைக்க வேண்டியதாயிற்று. புதிய வாழ்க்கையைத் தேடி அருகிலுள்ள சிறு நகரான வேடசந்தூருக்குக் குடிபெயர்ந்தனர். வேடசந்தூர் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தார் (1963). பள்ளி அதிக தூரம் இல்லை. ஆற்றைக் கடந்து திருச்சி சாலையில் அரை மைல் தூரம் நடக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் முதல் ரேங்க் என்பதால் அந்தப் பள்ளியின் செல்லப் பிள்ளையாகவே இருந்தார். பதினோராம் வகுப்பில் இவர்தான் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்துத் தினத்தந்தி பரிசு வாங்க வேண்டும், வாங்குவார் என்று அவருடைய ஆசிரியர்கள் எல்லாம் கூறினார்கள். அவருக்கு அப்படிப்பட்ட எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. பதினோராம் வகுப்பு இறுதித் தேர்வில் 600-க்கு 479 மதிப்பெண்கள் எடுத்துத் தேறினார் (1968).

 

மாநில முதல் மதிப்பெண் 529. அதைவிட 50 மதிப்பெண் குறைவு என்றாலும் அன்றைய கால கட்டத்தில் இது அதிகமான மதிப்பெண் என்று அனைவரும் கூறினர். அவர்களுடைய பள்ளியைப் பொறுத்த வரை அது மிக அதிக மதிப்பெண். அவர்கள் பள்ளி தொடங்கிய நாளிலிருந்தே இதுதான் அதிக மதிப்பெண் என்று கூறினார்கள்.

Related articles

Website created and maintained by Lenin and Jenny in the memory of their loving dad.